ஐ.பி.எல் 2022 தொடரின் 22-வது போட்டியில் பெங்களூரு அணியும்,
சென்னை அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா களமிறங்கினர். கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூத்ராஜ் இந்தத் தொடரில் தடுமாறிவருகிறார். அது இந்தப் போட்டியிலும் அவர் ஆட்டம் மோசமாக அமைந்தது. 16 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.அவரைத் தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார். 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 6.4 ஓவரில் வெறும் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா, ஷிவம் துபே இணை பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். இந்தத் தொடர் இதுவரையில் பார்க்காத ஆட்டத்தை துபேவும் உத்தப்பாவும் கொடுத்தனர். இருவரும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். சிறப்பாக ஆடிய ராபின் உத்தப்பா 18.5 ஓவரில் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து, களமிறங்கிய ஜடேஜா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மறுபுறம் ஷிவம் துபே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திவந்தார். இறுதி ஓவரில் 20 ரன்கள் எடுத்தால் துபே சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. அப்போது, ஸ்டிரைக்கில் இருந்தார் துபே. முதல் பந்திலேயே துபே சிக்ஸ் அடித்து அசத்தினார். அதனை இரண்டு பந்துகளைத் தவறவிட்ட அவர் அடுத்த பந்தில் சிக்ஸ் அடித்தார். 5-வது பந்தில் இரண்டு ரன்களை எடுத்தார் துபே.
நாட்டுக்காக ஐ.பி.எல்லை விட்டுட்டு வாங்க – இலங்கை வீரர்களை அழைக்கும் ரணதுங்கா
அதன்மூலம் 94 ரன்களை எட்டினார் துபே. இறுதி பந்தில் சிக்ஸ் அடித்தால் சதம் எட்டலாம் என்ற நிலையில் ஒரு ரன்களை மட்டுமே ஷிவம் எடுத்தார். அதன்மூலம் 46 பந்துகளில் 95 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் துபே. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 216 ரன்களைக் குவித்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.