திடீர் விலகல்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த மகேந்திரசிங் தோனி, முதல் லீக் போட்டி துவங்குவதற்குமுன் திடீரென்று பதவி விலகினார். ஒரு மாத காலத்திற்கு முன்பாவது தோனி பதவி விலகியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால்தான், அனுபவமற்ற கேப்டன் ஜடேஜா, சில உக்திகளை முன்கூட்டியே வகுத்திருக்க முடியும்.
பந்துவீச்சு குறைபாடு:
சிஎஸ்கேவில் பந்துவீச்சுத்துறை பலவீனமாக இருக்கிறது. தீபக் சஹார் காயத்தால் அவதிப்பட்டு வருவதுதான் இந்த பலவீனத்திற்கு காரணம். இதனால் முகேஷ் சௌத்ரி, தேஷ்பண்டே போன்ற அதிக ரன்களை வாரி வழங்கும் பௌலருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை இருக்கிறது. இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நிர்வாகம், சிறந்த பார்மில் இருக்கும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு தரவில்லை. இனிமேல் ராஜ்வர்தன், பிராவோ, பிரிடோரியஸ், மொயின் அலி, ஜடேஜா ஆகியோரை பயன்படுத்தினால் பந்துவீச்சு ஓரளவுக்கு பலமிக்கதாக இருக்கும்.
ஓபனர்கள் சொதப்பல்:
சிஎஸ்கேவின் பலமே ஓபனர்கள்தான். கடந்த சீசனில் ருதுராஜ், டூ பிளஸி இருவரும் சிறந்த துவக்கம் தந்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ருதுராஜ் படுமோசமாக சொதப்பி வருகிறார். அதேபோல் ராபின் உத்தப்பாவும் பெரிய ஸ்கோர் அடிப்பது கிடையாது. இதனால், ஓபனர்களுக்கு போதிய கவுன்ஸ்லிங் வழங்கி, அவர்கள் துவக்கத்தில் நிதானமாக விளையாட சுதந்திரம் தர வேண்டும்.
அணித் தலைமை:
அணிக்கு தலைமை ஜடேஜாவா, தோனியா என்ற குழப்பம் இன்னும் நிலவி வருகிறது. அந்த அளவுக்கு தோனியின் தலையிடு அதிகமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதனால், முழு அதிகாரத்தையும் தற்போதைக்கு ஜடேஜாவிடம் மட்டும் கொடுத்துவிட்டு, முக்கியமான போட்டிகளின்போது மட்டும் தோனி ஆலோசகராக இருந்தால் போதுமானது என பலர் கூறி வருகிறார்கள்.