நெருக்கடி:
இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக ஜடேஜா பார்க்கப்படுகிறார். இவர் இதற்குமுன்பு கேப்டனாக இருந்தது கிடையாது. திடீரென்று கேப்டன்ஸி செய்வதால் அழுத்தம், நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அணியை சிறப்பாக வழிநடத்த தவறிவிடுகிறார். மேலும், இதனால் இவரது ஆட்டத்தையும் இது பாதிக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இதனால் சிஎஸ்கே, புது கேப்டனை நியமித்தால் மட்டுமே சிஎஸ்கேவும், ஜடேஜாவையும் காப்பாற்ற முடியும் என பேச்சுகள் எழுந்துள்ளன. அப்படி ஜடேஜாவை நீக்கினால், அந்த கேப்டன்ஸி இடத்திற்கு மொயின் அலி, டுவைன் பிராவோ ஆகியோரில் ஒருவரைத்தான் சிஎஸ்கே தேர்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், சிஎஸ்கே உடனே இந்த முடிவினை எடுக்காது என்றும், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தால் மட்டுமே, சிஎஸ்கே இந்த முடிவினை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அந்த அணி தற்போது மோசமான பார்மில் இருப்பதால், இந்த அணிக்கு எதிராக எப்படியும் வெற்றிபெற்று, சிஎஸ்கே புத்துணர்வு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டி வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.