ஐ.பி.எல் தொடரின் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக மேத்யூ வேட், ஷப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். மேத்யூ வேட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஷப்மன் கில் அதிரடியாக ஆடிவந்தார்.அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, நிதானமாக ஆடினார். அவர், 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய மேத்யூ வேட் 46 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கலீல் அஹமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் முஷ்தபிகூர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.