ஆனால் பும்ராவின் ஆரம்பக் கட்டத்திலேயே அவரது திறமைகளை முன் உணர்ந்தவர் பார்த்திவ் படேல்தான். தோனியின் கீழ் இந்தியாவில் அறிமுகமான பிறகு, பும்ரா விராட் கோலியின் தலைமையில் ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மாறினார். பும்ராவின் பெரும் ஆதரவாளரான கோலி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் மீதான அவரது அபிமானத்தின் ஒரு பகுதியாக பிரபலமான கவர்ச்சிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவதையும் அவரது செயல்களைத் தானே செய்து காட்டியும் அவரை அரவணைத்தார் கோலி.
இந்நிலையில் முதன் முதலில் பும்ரா பற்றி பார்த்திவ் படேல் கோலியிடம் தெரிவிக்கும் போது கோலி என்ன சொன்னார் என்பதை பார்த்திவ் படேல் புட்டு புட்டு வைத்த போது, “2014ல், நான் ஆர்சிபியில் இருந்தபோது, பும்ரா என்ற இந்த பந்துவீச்சாளர் இருக்கிறார் என்று கோஹ்லியிடம் கூறினேன். அவரைப் பாருங்கள். அதற்கு பதிலளித்த விராட், ‘சோர் நா யார். யே பும்ரா-வும்ரா க்யா கரேங்கே?’ (அதை விடுங்கள். அத்தகைய வீரர்கள் என்ன செய்வார்கள்?”) என்றார் என்னிடம் கோலி, என்றார் பார்த்திவ் படேல்.
பார்திவ் குஜராத் அணியில் பும்ராவின் கேப்டனாக இருந்தார் மற்றும் அவரது எழுச்சியை நேரடியாக பார்த்தார். அவர் மேலும் கூறும்போது, “”அவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பும்ரா முதல் 2-3 ஆண்டுகள் ரஞ்சி டிராபியில் விளையாடினார். 2013 அவருக்கு முதல் வருடம், 2014ல் அவருக்கு நல்ல சீசன் இல்லை. 2015ல் அது மிகவும் மோசமாக இருந்ததால், அவரை சீசனின் நடுப்பகுதியில் வீட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று விவாதம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், அவர் மெதுவாக முன்னேறத் தொடங்கினார், மும்பை இந்தியன்ஸ் அவரை ஆதரித்தது. அவரது சொந்த கடின உழைப்பு மற்றும் அத்தகைய ஆதரவுதான் அவருக்குள் சிறந்ததை வெளிப்படுத்தியது” என்கிறார் பார்த்திவ் படேல்.
இன்றைய முக்கிய செய்திகள் (Best Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.