ருதுராஜ் சொதப்பல்:
சிஎஸ்கே தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட்தான். முதல் மூன்று போட்டிகளில் (0,1,1) சிறப்பாக செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 16 ரன்கள் மட்டும் அடித்து அவுட் ஆனார். இவர் பார்முக்கு திரும்பினால் சிஎஸ்கே பிரச்சினை ஓரளவுக்கு தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் பிராட் ஹக், ருதுராஜ் சொதப்புவதற்கான காரணம் குறித்துப் பேசியுள்ளார்.
பிராட் ஹக் பேட்டி:
“கடந்த தொடரில் விளையாடியதுபோல் தற்போதும் ருதுராஜால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவர் தனது எதிர்கால கிரிக்கெட் குறித்தும், இந்திய அணியில் இடம் பிடிப்பது குறித்தும் தற்போதே யோசிக்க துவங்கிவிட்டார் எனக் கருதுகிறேன். இதனால்தான், அவருக்கு அழுத்தம் ஏற்படுகிறது. ருதுராஜ் இனி இதுகுறித்து யோசிக்க கூடாது. சிஎஸ்கேவுக்காக விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணிக்காக விளையாடுவதை இத்தொடர் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம். இன்றைய வேலையை சிறப்பாக செய்தால், நாளைய நாளும் இனிமையாக அமையும்” எனக் கூறினார்.
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.