7 பேர்:
அந்த அணி 7 தரமான வெளிநாட்டு வீரர்களை வாங்கியிருந்தது. ஆன்ரிக் நோர்க்கியா, லுங்கி நெகிடி, முஷ்தபிசுர் ரஹ்மான், மிட்செல் மார்ஷ், ரௌவ்மேன் பௌல், டேவிட் வார்னர், டிம் செய்பர்ட் போன்ற அதிரடி வீரர்கள் இருந்ததால், டெல்லி அணியை அசைக்க முடியாது என்றுதான் கருதப்பட்டது. இந்நிலையில் இவர்களாலே, டெல்லி அணி ஆட்டம் கண்டுள்ளதுதான் வருத்தமான செய்தி. செய்பர்ட், ரௌமேன் பௌலை தவிர இன்னும் யாருமே அணியில் இணையவில்லை.
IPL 2022: ‘அவரு இந்தியாவின் குட்டி டிவிலியர்ஸ்தான்’…பாத்ததுமே கண்டு பிடிச்சுட்டேன்: ராகுல் புகழாரம்!
5 போட்டிகளில் ‘நோ’:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்றிருப்பதால், 5 போட்டிகளுக்குப் பிறகுதான் அணிக்கு திரும்புவார்கள். முஷ்தபிசுர் ரஹ்மான், லுங்கி நெகிடி ஆகியோர் தனிமை முகாமில் இருப்பதால், அடுத்த போட்டியில் பங்கேற்பது கடினம்தான். ஆன்ரிக் நோர்க்கியா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
மார்ஷ் விலகல்?
இந்நிலையில், இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்பட்டு வரும் மிட்செல் மார்ஷ் நீண்ட ஓய்வுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால், அவர் டெல்லி அணியிலிருந்து விலகிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகலாம். மார்ஷை 6.5 கோடிக்கு டெல்லி வாங்கியிருந்தது. நல்ல பார்மில் இருக்க கூடிய ஆல்-ரவுண்டர் என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கருதப்பட்டது. இந்நிலையில், அணியிலிருந்து விலகியுள்ளார்.
IPL 2022: இனி நான் இந்த இடத்துலதான் களமிறங்குவேன்…இதனால பிரச்சினை குறையும்: ஹார்திக் பளிச்!
இதனால் டெல்லி அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 7 தரமான வெளிநாட்டு வீரர்களை வாங்கி, கடைசியில் 2 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே களமிறங்க வேண்டிய நிலை இருப்பதால், கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் நிர்வாகத்தினர் சோகத்தில், ஏமாற்றத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆன்ரிக் நோர்க்கியா, மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்யும் பணியிலும் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.