Facebook Twitter Instagram
    Facebook Twitter Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Button
    FH Edits
    T Trends

    குலுங்கிய கோவை.. வீதிக்கு வந்து போராடிய ஊழியர்கள்.. ஓபிஎஸ் முதல் ஆளாக அறிக்கை.. மிஸ் செய்த இபிஎஸ்! | Coimbatore small scall workers protest: O Paneerselvam releases a statement

    makeflow.mks@gmail.comBy [email protected]21/12/2021No Comments2 Mins Read

    bredcrumb

    Coimbatore

    oi-Shyamsundar I


    Printed: Tuesday, December 21, 2021, 9:40 [IST]

    Google Oneindia Tamil News

    கோயம்புத்தூர்: ஜவுளி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கோயம்புத்தூரில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் கோயம்புத்தூரில் நேற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவில் பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஜவுளி துறை தொடங்கி கைவினை பொருட்களின் மூலப்பொருட்கள் வரை பலவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. காப்பர், அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களில் மூலப்பொருட்களின் விலை 30 சதவிகிதம் 200 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் மூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுக்க பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தின.

    ஒரே போடு போட்ட ஓபிஎஸ்.. மீண்டும் மீண்டும் சசிகலா.. எடப்பாடியை நெளிய வைத்த தருணங்கள்!ஒரே போடு போட்ட ஓபிஎஸ்.. மீண்டும் மீண்டும் சசிகலா.. எடப்பாடியை நெளிய வைத்த தருணங்கள்!

    போராட்டம்

    போராட்டம்

    மூலப்பொருட்களின் விலையை உடனே குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடு முழுக்க இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு கோவையிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தன. சிறு சிறு தொழிற்சங்கங்கள் சேர்ந்து கோவையின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக போராட்டம் நடத்தின. நேற்று கோவையில் தொழிற்சாலைகள் ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    முடக்கம்

    முடக்கம்

    கோவை ஆட்சியர் அலுவலகம் முன் 2500க்கும் அதிகமான தொழிலாளர்கள் கூடி விலைவாசி உயர்வை குறைக்கும்படி கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர். இதனால் 50 ஆயிரம் சிறு குறு நிறுவன பணிகள் நேற்று முடங்கின. அதேபோ 1500 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திகள் நேற்று முடங்கின, கோவை முழுக்க 5 லட்சம் பேர் வரை இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

     கோவை போராட்டம்

    கோவை போராட்டம்

    சி.ஆர்.ஐ., டெக்ஸ்மோ, பிரிகால், சிட்கோ உள்ளிட்ட கோவையின் அனைத்து விதமான தொழில்நிறுவன ஊழியர்கள் எல்லோரும் நேற்று இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோவையை இந்த போராட்டம் குலுக்கிய நிலையில் கோவையின் முக்கிய அரசியல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இதை பற்றி பெரிதாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக அறிக்கையும் வெளியிடவில்லை.

    கடிதம்

    கடிதம்

    மாறாக ஜவுளி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலை உயர்வை உடனே குறைக்க வேண்டும். உடனே ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ஜவுளித்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

    அறிக்கை

    அறிக்கை

    ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுதான் விலைவாசி உயர்வை குறைக்கும். ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். விலை உயர்வு ஊழியர்களை மட்டும் பாதிக்காது. சிறு – குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் . குடும்பங்களையும் பாதிக்கும். கொரோனா பரவல் காரணமாக அவர்கள் இழப்பை சந்தித்துவிட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக ஜவுளித்துறை மிகுந்த இன்னல்களை சந்தித்துள்ளது என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

    நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

    Permit Notifications

    You’ve gotten already subscribed

    English abstract

    Coimbatore small scall employees protest: O Paneerselvam releases a remark supporting them.

    Tale first revealed: Tuesday, December 21, 2021, 9:40 [IST]

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021

    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • Web App Vs Website: Key Differences Explained
    • Leo Movie Tamil 2024 Full Movie HD Download
    • Finest Crypto Indicators For Profitable Trading Methods
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    top slots app