Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Trends

    அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிளுக்கு கொரோனா..! தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு | Dimple Yadav wife of Samajwadi Party leader Akhilesh Yadav has been diagnosed with covid-19 infection

    makeflow.mks@gmail.comBy [email protected]22/12/2021No Comments2 Mins Read

    bredcrumb

    Lucknow

    oi-Rajkumar R


    Up to date: Wednesday, December 22, 2021, 17:52 [IST]

    Google Oneindia Tamil News

    லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், தனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி, சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் மக்களை சந்தித்து ஆதரவை இப்போதிருந்தே திரட்டி வருகிறனர்.

    இந்நிலையில் தான் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும், முன்னாள் எம்பியுமான டிம்பிள் யாதவ், தனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    யோகி ஆட்சியில்.. 'சமாஜ்வாடி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன'.. அகிலேஷ் யாதவ் சொல்கிறார் யோகி ஆட்சியில்.. ‘சமாஜ்வாடி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுகின்றன’.. அகிலேஷ் யாதவ் சொல்கிறார்

    அகிலேஷின் மனைவி டிம்பிள்

    அகிலேஷின் மனைவி டிம்பிள்

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது, அதன் அறிக்கை நேர்மறையானது. நான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டேன், எந்த அறிகுறியும் காட்டவில்லை. எனக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பிற்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்” என்று டிம்பிள் யாதவ் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

    தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு

    தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு

    டிம்பிள் யாதவ் தான் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதும் தனது கொரோனா பரிசோதனை செய்தபோதும், தனக்கு தொற்று பாதித்து இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பாதுகாப்புக்காகவும், தன்னை சுற்றியிருப்பவர்களின் பாதுகாப்புக்காகவும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அகிலேஷ் யாதவ் பிரச்சாரம்

    அகிலேஷ் யாதவ் பிரச்சாரம்

    டிம்பிள் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கணவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தடுப்பூசி போட்டுகொண்டாரா என்பது தெரியவில்லை. அவரது தந்தையான முலாயம் சிங் யாதவ் தான் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்வதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. உ.பி., சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அகிலேஷ் யாதவ், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவரும் தன்னை பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்புள்ள நிலையில்,வரும், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் நாளை அலிகாரில் நடைபெறும் கூட்டுப் பேரணியில் கலந்து கொண்டு பேச உள்ள நிலையில் தான் டிம்பிள்யாதவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து

    தடுப்பூசி குறித்து சர்ச்சை கருத்து

    இந்த ஆண்டு ஜனவரியில், அகிலேஷ் யாதவ் தனக்கு “பாஜக தடுப்பூசி” போட்டுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியிருந்தார், இது ஆளும் கட்சித் தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதற்கு விளக்கமளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், “தடுப்பூசியை உருவாக்கும் எந்த விஞ்ஞானி அல்லது தடுப்பூசி தயாரிப்பதில் உதவிய எந்த நபர் குறித்தும் நான் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. பாஜக எடுத்த முடிவுகளால் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் நான் கேள்விகளை எழுப்பினேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

    Permit Notifications

    You have got already subscribed

    English abstract

    Dimple Yadav, the spouse of Samajwadi Celebration chief Akhilesh Yadav, has stated on her Twitter web page that she has been showed to be inflamed with covid-19 and has remoted herself.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    இந்தியாவில் பிப்ரவரி மாதம் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும்.. ஐஐடி கான்பூர் கணிப்பு | Third COVID wave in India to peak in February: IIT-Kanpur researchers predict

    24/12/2021

    Happy Christmas என்று சொல்லாமல் நாம் ஏன் ‘Merry Christmas’ என வாழ்த்துகிறோம் தெரியுமா?

    24/12/2021

    ஸ்டிரிக்ட்.. ஃபைன் போடுங்கள்.. லாக்டவுன் இல்லையென்றாலும்.. முதல்வருக்கு அதிகாரிகள் தந்த அட்வைஸ்!

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • #208 – Behind the Scenes at the CloudFest Hackathon
    • #207 – Rob Ruiz on WP Rig and the Future of Theme Development
    • #206 – Jonathan Desrosiers on WordPress Sustainability, Community Engagement, and Release Strategies
    • #205 – Matt Cromwell on Redefining WordPress Product Growth in a Crowded Ecosystem
    • Latest AI News and Model Updates: Your Comprehensive Guide
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2026 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.