
ஆலமர விழுதாய்
நானிருக்க
ஆணிவேராய்
அப்பனாய்
என் தகப்பன்
நீ இருந்தாய்…
ஏர் ஓட்டியே
எத்தனை
காலம் வளர்த்தாய்
என்னை…
எப்படியாவது
நான் கடுமையாக
உழைத்து
உன் ஏருக்கும்
கலப்பைக்கும்
கண்டிப்பாக
காலம் காலமாய்
நன்றியுடன்
நடப்பேன் அப்பா…